Tuesday, February 8, 2011

கூட்டணி முடிவாகும் வரை வாய் திறக்க மாட்டேன்: ராமதாஸ்

சென்னை: ""கூட்டணி முடிவாகாததால் அது பற்றி பேச மாட்டேன்; எந்த கட்சியுடனும் பணியாற்ற தொண்டர்கள் தயாராக வேண்டும் '' என்று ராமதாஸ் பேசினார்.



சென்னை திரு.வி.க,நகர் தொகுதி பா.ம.க., தேர்தல் களப் பணியாளர் ஆலோசனை கூட்டம் ஓட்டேரியில் நடந்தது. கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: இளைஞர்களை மையமாக வைத்து தேர்தல் வியூகம் அமைத்துள்ளோம். சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களாக, இளைஞர்கள் மாற வேண்டும். சினிமாக்காரர்கள் பின்னால் சென்று சீரழியாதீர்கள்; கொள்கைப்பிடிப்புடன் வாழ உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை குறி வைத்து தீவிரமாக பணியாற்றுங்கள். கூட்டணி இன்னும் முடிவாகாததால், அது பற்றி இப்போதைக்கு ஏதும் பேச முடியாது. எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் பணியாற்ற தயாராக இருங்கள். தொப்புளில் பம்பரம் விடும் நடிகரின் கட்சி வரும் தேர்தலில் புறக்கணிக்கப்பட வேண்டும். இரண்டு திரைப்படம் நடித்தவர்கள் கூட முதல்வராக ஆசைப்படுகிறார்கள். சினிமாக்காரர்களின் கையில் தமிழகம் சிக்கினால் என்னவாகும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நடிகர்கள் தங்களை தெய்வங்களாக எண்ணி கொள்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி வர வேண்டும். ஆந்திராவில் முதல்வர் கனவோடு கட்சி தொடங்கிய சிரஞ்சீவி போனியாகாமல் கட்சியை ஊற்றி மூடிவிட்டார். இந்த நிலைமை தமிழகத்தில் உள்ள சில கட்சிகளுக்கும் உருவாகும். பா.ம.க.,வை விட நல்ல கொள்கைகள் உள்ள கட்சி தமிழகத்தில் இருப்பது நிருபிக்கப்பட்டால், அந்த கட்சியில் நான் சேர்ந்துவிடுகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: