Tuesday, February 22, 2011

திருமாவளவனை இலங்கை திருப்பி அனுப்பிய விவகாரம்: ராமதாஸ், வீரமணி கண்டனம்

சென்னை, பிப். 22: விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கை சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியது.

இதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பார்வதி அம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நான் இலங்கை சென்றேன். எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அவர்கள் கூறிய விளக்கம் ஏற்கும்படியாக இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினரான என்னை திருப்பி அனுப்பியது இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானமாகும். இந்தப் பிரச்னையை நான் நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்றார்.

ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருமாவளவனுக்கு "டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்' உள்ளது. அதன் மூலம் எந்த நாட்டுக்கும் எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியும்.

இந்த சிறப்பு பாஸ்போர்ட்டை மதிக்காமல் அவரை திருப்பி அனுப்பியிருப்பதன் மூலம் இந்தியாவையும், இந்திய வெளியுறவுத் துறையையும் இலங்கை அவமதித்துள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: