Friday, August 28, 2015

ஜெயலலிதாவைத் தொடர்ந்து சோ.ராமசாமியை சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ்

சென்னை : உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ. ராமசாமியை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது, சோ.ராமசாமி விரைவில் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர், டாக்டர் என்ற முறையில் சோ. ராமசாமிக்கு அளிக்கப்படும் மருத்துவம் குறித்தும், உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் மருத்துவர்களிடம் ராமதாஸ் கேட்டறிந்தார்.அண்மையில் சோவை முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: