Monday, August 10, 2015

களத்தில் குதித்த அன்புமணியின் இளைஞர் படை...120 தொகுதிகளில் வீடு வீடாக துண்டுப் பிரசுர பிரச்சாரம்

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் திமுக, தேமுதிகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி முதற் கட்டமாக 120 தொகுதிகளில் வீடு வீடாக துண்டுப் பிரசுரம் கொடுத்துப் பிரச்சாரம் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது.முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற போது எதிர்கட்சியினர் பலரும் முதல்வர் கனவில் வலம் வந்தனர். பாஜக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி பாமக தலைமையில் அன்புமணியை முதல்வராக அறிவித்து ஒரு அணி, விஜயகாந்த் தலைமையில் ஒரு அணி என எதிர்கட்சியினர் தேர்தலுக்கு தயாராகி வந்தனர். இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்தது. இதனையடுத்து அரசியல் வானில் காட்சிகள் மாறின.ஆளும் அதிமுகவிற்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க தயாராகி வருகிறது திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய தயாராகிவிட்டார். இதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்தும் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: