Sunday, August 2, 2015

தடையை மீறி கனிம மணல் ஏற்றுமதி: ராமதாஸ் குற்றச்சாட்டு

கனிம மணல் அள்ள தடை விதிக்கப்பட்டபோதிலும், 2 லட்சம் கோடி ரூபாய்க்கு கனிம மணல் ஏற்றுமதி நடைபெற்றிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனிம மணல் தொடர்பான வழக்கில், வி.வி.மினரல்ஸ் மற்றும் டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட் ஆகிய நிறுவனங்களுக்கு ஆதரவாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் செயல்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

கனிம மணல் முறைகேடு புகார் குறித்து ஆய்வு நடத்திய ககன்தீப்சிங் பேடியின் அறிக்கையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: