
அப்போது அவர் கூறியதாவது,
2016ஆம் ஆண்டு நடைறெ உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மதுஒழிப்பு மற்றும் ஊழல் ஒழிப்பை முன்நிறுத்தி மக்களை சந்திக்க இருக்கிறோம். பாமக ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க 3 இலக்க தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்படும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல் நோயை தடுப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்த நோயை கண்டுபிடிக்க இலவச மருத்துவ ஆய்வு மையங்களை அதிக அளவில் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment