Friday, February 20, 2015

பன்றிக் காய்ச்சல் நோயை தடுப்பது குறித்து ஜெ.பி.நட்டாவுடன் ஆலோசனை: அன்புமணி தகவல்

 

திருவள்ளுர் ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழுக் கூட்டம் திருவள்ளுரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வந்த பாமக எம்பியும், முதல் அமைச்சர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 

2016ஆம் ஆண்டு நடைறெ உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மதுஒழிப்பு மற்றும் ஊழல் ஒழிப்பை முன்நிறுத்தி மக்களை சந்திக்க இருக்கிறோம். பாமக ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க 3 இலக்க தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்படும். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல் நோயை தடுப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்த நோயை கண்டுபிடிக்க இலவச மருத்துவ ஆய்வு மையங்களை அதிக அளவில் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: