Thursday, February 12, 2015

பா.ம.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. வரும் என்று எதிர்பார்க்கிறோம்: அன்புமணி ராமதாஸ்

 

பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், வியாழக்கிழமை டெல்லியில் ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்து தமிழக ரெயில்வே திட்டங்கள் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், 

டெல்லியில் கெஜ்ரிவால் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளார். தமிழக மக்கள் மனங்களிலும் உடனடி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது. 

மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்று உள்ளது. தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. வரும் என்று எதிர்பார்க்கிறோம். ஏனெனில் தமிழ்நாட்டில் நாங்கள் பா.ஜ.க.வை விட பெரிய கட்சி. கடந்த காலங்களில் 21 எம்.எல்.ஏ.க்கள், 7 எம்.பி.க்கள் என்று வெற்றி பெற்று இருக்கிறோம். 

தி.மு.க.,அ.தி.மு.க. தவிர வேறு எந்த கட்சி எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு வந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: