Monday, August 6, 2012

ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவானவர்களே உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் : ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகள் பணியிடங்களில் 8 இடங்கள் காலியாக உள்ளன.

மேலும் இரு நீதிபதிகள் விரைவில் ஓய்வு பெற இருப்பதால், அதனால் ஏற்படும் காலி இடங்க ளையும் சேர்த்து நிரப்புவதற்காக தகுதியுடைய 10 பேரின் பட்டியல் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு வன்னியர்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 20 இடங்கள் வன்னியர் களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போதுள்ள நீதிபதிகளில் ஒரே ஒருவர் மட்டுமே வன்னியர் ஆவார்.

தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த கட்சிக்கு ஆதரவான வழக்குறை ஞர்கள் மட்டு மே உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் படுகிறார் கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வருகிறது.

நீதிபதிகள் நியமனத்தில் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண் டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் பிறகாவது நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்த தகுதியுடைய வழக்கறிஞர்களுக்கும், தலைமை நீதிபதிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

இதற்கு வசதியாக நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அறிமுகம் செய்யவேண்டும். அதற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகளை தேர்வு செய்யும்போது வன்னிய சமுதாயத்தை சேர்ந்த 3 பேருக்காவது வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்’’ என்று கூறப் பட்டுள்ளது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: