Monday, August 13, 2012

பா.ம.க. சார்பில் இடஒதுக்கீடு போராட்டம்: ராமதாஸ் பேச்சு



பா.ம.க. சார்பில் செப்டம்பர் 17ந் தேதி இடஒதுக்கீடு போராட்டம் நடைபெறும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி பா.ம.க சார்பில், புதிய அரசியல் புதிய நம்பிக்கை' என்பதின் விளக்க பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், கலந்து கொண்டு பேசியதாவது:-

பா.ம.க. இனிமேல் தி.மு.க., அ.தி.மு.க.வோடு கூட்டு சேராது. தனித்தே போட்டியிடும். நாம் கூறுவது போல் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் தனித்தே போட்டியிடுவோம் என்று கூறத்தயாரா? மது வேண்டுமா? வேண்டாமா? என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
செப்டம்பர் 17-ந்தேதி தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெறும். டிசம்பர் 17-ந்தேதி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். மதுராந்தகம் ஏரியை தூர் வார வேண்டும் என்று வலியுறுத்தி நானே முன்னின்று தூர் வாரும் மண்ணை தலையில் சுமந்து போராட்டத்தில் குதிப்பேன். இவ்வாறு கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: