Saturday, August 11, 2012

டாஸ்மாக் கடை முன் பாய் விரித்து படுத்து நூதன போராட்டம்: பா.ம.க. நிர்வாகி கைது






பாளையங்கோட்டை மேலப்பாளையம் சந்தை முக்கு ராஜா நகர் விலக்கு பகுதியில் பாருடன் கூடிய அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடை பொது இடத்தில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவிகளுக்கு இடையூறாக இருந்து வருவதாக கூறி, அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டார்கள். இந்நிலையில் ராஜாநகர் விலக்கில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நூதன போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி அந்த மதுக்கடையின் முன்பு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாய் விரித்து படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவரும், பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளருமான வியனரசு தலைமை தாங்கினார். ம.தி.மு.க.வை சேர்ந்த அகஸ்டின் மற்றும் கிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் 4 பேரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: