Friday, August 17, 2012

மாணவன் சாவு: பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய ராமதாஸ் கோரிக்கை

 Boy Dies School Swimming Pool Pmk Demands Arrest
YGP School 6th Annual Day Celebrati...
Ads by Google
Promote your website  www.Google.com/AdWords
Reach more customers with AdWords Start advertising with Google today
சென்னை: பள்ளியில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலியான விவகாரத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படித்து வந்த ரஞ்சன் என்ற நான்காம் வகுப்பு மாணவன் நீச்சல் பயிற்சியின் போது குளத்தில் மூழ்கி உயிரிழந்தான் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
லட்சம் லட்சமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பில் எந்த அக்கறையும் செலுத்துவதில்லை என்பதையே இது போன்ற விபத்துகள் காட்டுகின்றன.
சென்னையில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் நீச்சல் பயிற்சி என்ற பெயரில் மாணவர்களிடமிருந்து பணம் பறிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.
மாணவன் ரஞ்சன் படித்த பள்ளியிலும் இதே நிலை தான். மாணவர்களின் நீச்சல் பயிற்சிக்காக போதிய எண்ணிக்கையில் உயிர்காப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. ரஞ்சன் குளத்தில் மூழ்கி வெகு நேரத்திற்குப் பிறகே அவரை தேடும் பணிகள் தொடங்கியுள்ளன. சற்று முன்பாகவே தேடுதல் பணியை தொடங்கியிருந்தால் ரஞ்சனை காப்பாற்றியிருக்கலாம்.
ஆனால், பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டியதால் மாணவன் உயிரிழக்க நேரிட்டிக்கிறது. எனவே, மாணவன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அதில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும்.
சென்னை தாம்பரத்தில் மாணவி சுருதி பேருந்திலிருந்து உயிரிழந்த வழக்கில் சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைப் போல இந்த வழக்கிலும் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அனுமதியின்றி நடத்தபடும் நீச்சல் குளங்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: