Sunday, July 29, 2012

நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை வைக்க வேண்டாம்: ராமதாஸ் பேச்சு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடியில் வந்தவாசி சட்டமன்ற தொகுதி பா.ம.க. சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த கூட்டத்தில் இளைஞர் அதிகமாக உள்ளனர். வன்னியர்கள் இதுவரை ஆளவில்லை. காரணம் வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை என்றனர். ஆனால் இப்போது ஒற்றுமை வந்து விட்டது. நாம் ஆள வேண்டும்.

இந்த முறை நாம் ஆண்டே தீரணும். இதற்கு எந்த தியாகத்தையும் செய்ய நமது இளைஞர்கள் தயாராக உள்ளனர். நமது இனத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் மாம்பழத்திற்கு ஒட்டு மொத்தமாக ஒட்டு போட தயாராகி விட்டனர்.

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் அரசியல் கட்சிகள். இதில் எந்த அரசியல் கட்சி தலைவர்களும் வன்னியரை பற்றி சிந்தித்தது கிடையாது, பேசியது கிடையாது.

சினிமா படங்களை பாருங்கள் ஆனால் அடிமைகளாக மாறிவிடாதீர்கள். நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை வைக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: