Tuesday, July 3, 2012

மெரீனா கடற்கரையில் டாக்டர் ராமதாஸ் போதை விழிப்புணர்வு பிரசாரம்

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


மதுக்குடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் நாட்டில் மது அரக்கனுக்கு இளைஞர்கள் அடிமையாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லா தீமைகளுக்கும் தாயாக விளங்கும் மதுவை என்ன விலை கொடுத்தாவது ஒழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் மதுவை ஒழித்து மக்களை காக்க வேண்டிய அரசே மதுக்கடைகளை திறந்து, மது என்னும் விஷத்தை விற்று மக்களை கொல்லும் அவலம் அரங்கேறி வருகிறது.

வருகிற 11 ந்தேதி மதுக்கடைகளுக்கு அடையாள பூட்டுப்போடும் அறவழிப்போராட்டம் நடக்க உள்ளது. இந்த போராட்டம் குறித்தும், மதுக்கடைகளை மூட வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே பா.ம.க. சார்பில் நாளை (புதன்கிழமை) விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறவுள்ளது.

அதிகாலை 6 மணிக்கும் பின்னர் மாலை 6 மணிக்கும் நடைபெறவுள்ள இந்த பிரசாரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று கடற்கரையில் நடைபயிற்சிக்காகவும், காற்று வாங்குவதற்காகவும் வரும் மக்களிடையே மதுவின் தீமைகள் மற்றும் மது ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்களை வழங்குவார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: