Monday, July 23, 2012

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ்

செய்யாறு: பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். இனி மற்ற கட்சி கொடியை வன்னியர் பிடிக்க மாட்டான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
செய்யாறில் பாமக சார்பில் 'புதிய அரசியல், புதிய நம்பிக்கை' விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஜி.கே.மணி தலைமை தாங்கிய அக் கூட்டத்தில் பேசிய கூறுகையில்,
இந்த மாவட்டத்தை ஆண்ட மன்னர் சம்புவராயர் அவரது பெயரில் இந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என இருந்தது. இதனை பொறுக்காதவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் என மாற்றி விட்டனர். நாங்கள் ஆள வந்தவுடன் மீண்டும் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என மாற்றுவோம்.
ஆட்சி வரும் முன்னே 10 வருடங்களாக தனி பட்ஜெட் போட்ட ஒரே கட்சி பா.ம.க மட்டும் தான். எங்களுக்கு யார் குடியையும் கெடுக்க தெரியாது நீங்கள் குடியை கொடுத்து எங்கள் குடியை கெடுக்கிறீர்கள்.
இனியும் இலவசங்களை பெற கியூவில் நிற்க மாட்டோம், தன்மானம் உள்ளவர்கள் நாங்கள். உயர் நீதிமன்றத்தில் 54 பதவிகளில் 1 வன்னியர் மட்டும்தான் நீதிபதியாக உள்ளார். 32 மாவட்டக் கலெக்டர்களில் ஒருவர் மட்டும்தான் வன்னியர்.
இலவசம் வேண்டாம், தரமான கல்வி, கட்டாய கல்வியை கொடுங்கள், அம்பானி குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும். அதற்காக தான் 10 வருடங்களுக்கு முன்பே சமச்சீர் கல்வி முறைக்கு போராட்டம் செய்தேன்.
உங்களில் சிலருக்கு சந்தேகம் இருக்கும். தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டனி வைப்பாரா என சந்தேகம் வேண்டாம்.
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து போட்டியிடும். இனி மற்ற கட்சி கொடியை வன்னியர் பிடிக்க மாட்டான்.
வரும் செப்டம்பர் 17ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 20 சதவீதம் இடஓதுக்கீடு வன்னியருக்கு வழங்கிட வலியுறுத்தி நாடே மிறளும் அளவிற்கு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: