Sunday, July 8, 2012

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அரிசி விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண வகை அரிசியின் விலை கிலோவுக்கு 5 ரூபாயும், சன்னரக அரிசி விலை கிலோவுக்கு ரூ 10 முதல் ரூ 15 வரையும் உயர்ந்துள்ளது.

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லாத நிலையில் பெரும்பான்மையான மக்கள் வெளிச்சந்தையில் இருந்து அரிசி வாங்க வேண்டிய நிலையில்தான் உள்ளனர். எனவே வெளிச்சந்தையில் அரிசி விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் குறுவை சாகுபடி பரப்பு பாதிக்கும் கீழாக குறைந்துவிட்டது. இதனால் இனிவரும் மாதங்களில் அரிசி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே அரிசி விலையை கட்டுக்குள் வைக்க தொலைநோக்கு பார்வையுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: