Thursday, May 10, 2012

வெளிநடப்பு ஏன்? பாமக எம்எல்ஏ பதில்!

சட்டசபையில் இன்று (10/05/2012) கேள்வி நேரம் முடிந்ததும் பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசு ஒரு பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டார். இதற்கு சபாநாயகர் வேறொரு நாளில் இதுபற்றி பேச அனுமதி அளிப்பதாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கலையரசு, கணேஷ் குமார் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். சபையில் இருந்து வெளியேறிய பின்னர் கலையரசு நிருபர்களிடம் கூறும்போது, வேலூர் மாவட்டம் வேளாண்காடு கோவில் திருவிழாவில் டாஸ்மாக் கடை வைத்து மது விற்பனை செய்யப்படுகறது. இதுபற்றி பேச சபாநாயகர் அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: