Wednesday, May 16, 2012

திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் பிரிக்ககோரி போராட்டம் நடத்துவோம் :ராமதாஸ்

திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் பிரிக்ககோரி போராட்டம் நடத்துவோம் :ராமதாஸ் வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’சமச்சீர் கல்வியால் எந்தவித பயனும் இல்லை. தமிழகத்தில் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. பிரிகேஜி வகுப்பு கட்டணம் என்ஜினீயரிங் கல்லூரி கட்டணத்துக்கு இணையாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் பா.ம.க. போட்டியிடும் ஓட்டுக்கு ஒரு பைசா கூட கொடுக்கமாட்டோம். திராவிட இயக்கங்களுடன் கூட்டணி இல்லை. சாதிகட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். வருகிற 2016-ல் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் பிரிக்ககோரி 10 ஆயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்துவோம். வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்ககோரி வருகிற செப்டம்பர் மாதம் போராட்டம் நடைபெறும்’’ என்று கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: