Thursday, May 10, 2012

நியாயப்படியும், தர்மப்படியும் எங்களுக்குத்தான் சொந்தம் :ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’கடந்த 6 மாதங்களாக கடலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சமூக விரோத வன்முறை கும்பல் பா.ம.க.வினரை தாக்கி வருகின்றனர். இதுபற்றி பலமுறை போலீசாரிடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் அவர்களுடைய வீடுகள் மீது தொடர்ந்து தாக்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு போலீசாருக்கு இருந்தும் சமூக விரோத கும்பல்களை கட்டுப்படுத்த அவர்களால் ஏன் முடியவில்லை? இதில் என்ன தயக்கம்? இந்த பிரச்சினையில் பா.ம.க.வினரை சமாதானப்படுத்தி வருகிறேன். இனிமேலாவது சமூக விரோத கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் மேலும் தொடர்ந்து நடந்தால் அதன் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைதி வழியில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். கடலூரில் உள்ள வன்னியர் சங்க அலுவலகம் சட்டப்படியும், நியாயப்படியும், தர்மப்படியும் எங்களுக்குத்தான் சொந்தம். என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்கு பா.ம.க. ஆதரவு உண்டு’’ என்று கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: