Thursday, May 17, 2012

அ.தி.மு.க., அரசின் ஓராண்டு ஆட்சியில் 500 கொலைகள்: 300க்கும் மேற்பட்ட கொள்ளைகள்: ராமதாஸ்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் அ.தி.மு.க., அரசின் ஓராண்டு ஆட்சியில் 500 கொலைகள் நடந்துள்ளன. 300க்கும் மேற்பட்ட கொள்ளைகள் நடந்துள்ளன. மின் வெட்டு அதிகரித்துள்ளது. மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக, 20 ஆயிரம் கோடி அளவிற்கு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்தார். புதுக்கோட்டை இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக., 75 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என கிண்டலாக தெரிவித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: