Sunday, May 13, 2012

மக்கள் தொலைக்காட்சியின் விளையாடு வாகை சூடு!

கேம் ஷோக்கள் சீஸன் களைகட்ட ஆரம்பித்துவிட்டன. இந்த போட்டியில் மக்கள் தொலைக்காட்சியும் குதித்துவிட்டது. மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு பிற்பகல் 1 மணிக்கு ஒளி பரப்பாகும் புதிய நிகழ்ச்சி விளையாடு வாகை சூடு. மாநிலமே வெயிலிலும் வேர்வையிலும் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டியும் 1 நிமிட நேரத்துக்குள் முடிந்துவிடும். இந்த ஒரு நிமிடத்துக்குள் செய்து முடித்தால் வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுவெளிகளில் வரும் பார்வையாளர்களே இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். வெற்றி பெறுவோருக்கு ஏகப்பட்ட பரிசுகளையும் தருகிறார்கள். சித்ரா இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: