Monday, March 21, 2011

ஏழு சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்குபா.ம.க.,வில் மீண்டும் வாய்ப்பு

திண்டிவனம்:பா.ம.க.,வில் தற்போதைய 11 எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை; ஏழு பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இக்கட்சியில் தற்போது 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, வேல்முருகன், இளவழகன், ராஜா, எதிரொலி மணியன், திருக்கச்சூர் ஆறுமுகம், ஓமலூர் தமிழரசு ஆகியோருக்கு மீண்டும் அக்கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேல்மலையனூர் செந்தமிழ்ச்செல்வன், காஞ்சிபுரம் சக்தி கமலாம்பாள், திருப்போரூர் மூர்த்தி, முகையூர் கலிவரதன், பூம்புகார் பெரியசாமி, தர்மபுரி வேலுச்சாமி, தாரமங்கலம் கண்ணையன், எடப்பாடி காவேரி, பவானி ராமநாதன், கபிலர்மலை நெடுஞ்செழியன், காவேரிப்பட்டினம் மேகநாதன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை.எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடு, தொகுதி சீரமைப்பு, தொகுதியில் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பளிப்பது தொடர்பாக முடிவெடுத்ததாக பா.ம.க., தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: