Thursday, January 7, 2016

திமுக, அதிமுக-வை மக்கள் புறக்கணிப்பார்கள்: அன்புமணி ராமதாஸ்

வரும் சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

புதுக்கோட்டையில் உள்ள சின்னப்பா பூங்காவில், அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி பங்கேற்று உரையாற்றினார்.

தமிழகத்தில், கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனச் சாடினார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வருகிற தேர்தலில், அதிமுக, திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: