Monday, January 11, 2016

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

 

பாட்டாளி மக்கள் கட்சியில் பல்வேறு சமுதாய மக்கள் இணையும் நிகழ்ச்சி சேலத்திலுள்ள குகை பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பல்வேறு சமுதாயத்தினர் ஒருங்கிணைந்த அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலர் டி.இரவிகிருஷ்ணன் தலைமையிலான நூற்றுக்கணக்கானவர்கள் பா.ம.கவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளனர். இரு திராவிடக் கட்சிகளை ஒதுக்கி, மக்கள் நலனில் அக்கறைக் காட்டும் கட்சியாக பா.ம.க.வை அவர்கள் அங்கீகரித்துள்ளனர். திராவிட ஆட்சிக்கு விடுதலை வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் பா.ம.க.வுக்கு வருகின்றனர்.

திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்து தவறு செய்தோம். இனி அந்த தவறை செய்ய மாட்டோம். அதற்கு மக்கள் மத்தியில் மன்னிப்பும் கேட்டுவிட்டோம். தொடர்ந்து மன்னிப்புக் கேட்டு வருகிறோம்.

2006-இல் பெரிய கூட்டணி அமைத்தும் திமுக 95-இடங்களில் மட்டுமே வென்றது. அதைத் தொடர்ந்து நடந்த 2011-தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட அவர்களால் வர முடியவில்லை. தொடர்ந்து நடந்த மக்களவைத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட திமுக வெற்றி பெறவில்லை.

அக்கட்சி 7-தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்குச் சென்றுவிட்டது. மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட கட்சியாக உள்ள திமுக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்திக்கும்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை கொண்டுவர ராமதாஸ்தான் குரல் கொடுத்தார், பா.ம.க. ஆதரவுடன் ஆட்சி நடத்திய திமுக தலைவர் கலைஞர் அவர்களை ஒரு வகையில், மிரட்டித்தான் சமச்சீர் கல்வியை தமிழகத்தில் கொண்டு வந்தோம், அதை நடைமுறை படுத்தினோம்.
 
தலித்துக்கு எதிரான கட்சி என பா.ம.க. மீது பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்துச் சமுதாயத்துக்கான கட்சியாக பா.ம.க. உருவெடுத்து வருகிறது. தலித் மக்களுக்கோ, மற்ற தலித் மக்களின் உரிமைக்காக போராடும் அமைப்பினருக்கோ நாங்கள் எதிராவர்கள் இல்லை. தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்த பூட்ட்டாசிங், டாக்டர் அம்பேத்கருக்கு பிறகு தலித் மக்களுக்கு அதிகப்படியான சலுகைகளை வழங்கியவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான் என சென்னையில் நடந்த மாநாட்டில் பேசினார். வரும் காலங்களில், தலித் மக்களுக்கு மட்டுமல்ல.. அனைத்துச் சமுதாயத்தினருக்கும் பாதுகாப்பாக நாங்கள் இருப்போம். மக்கள் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். முன்னேற்றத்தை நாங்கள் கொண்டு வருவோம் என்றார்.

கூட்டத்துக்கு பிறகு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, “திமுக, அதிமுக தவிர பாமக தலைமையை ஏற்கும் அனைத்து   கட்சியையும் நாங்கள் வரவேற்கிறோம். சிறப்பான கட்சிகள் இணைத்தால், கூட்டணி ஆட்சியை பா.ம.க அமைக்கும். அதில், துணை முதல்வர் உள்ளிட்ட பல பொறுப்புகள் கூட்டணிக்கு வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, பா.ம.கவின் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: