Sunday, January 3, 2016

பாமக சாதிக்கட்சி அல்ல : ராமதாஸ் பேச்சு

 

 விழுப்புரம் அருகே உள்ள பூத்தமேடில் பாமக கிழக்கு மண்டல அரசியல் மாநாடு ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

 கட்சியின் துணைப் பொதுச் செயலர் தங்கஜோதி தலைமை வகித்தார்.  மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:  ‘’தமிழக மக்களின் இன, மொழி, உரிமைகளுக்காக தொடர்ந்து 26 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன். எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அங்கு சென்று போராட்டம் நடத்துபவன் நான்.  நாங்கள் பலமுறை பதில் தந்துவிட்ட நிலையிலும், பாமகவை சாதிக் கட்சி என்றழைக்கின்றனர். மேற்கண்ட போராட்டங்கள் ஒரு சாதிக்காக நடத்தப்பட்டதா?

 தமிழகத்தில் உள்ள 49 கட்சிகள் என்ன செய்துள்ளன? நாங்கள் தமிழகத்தில் உள்ள 370 சாதிக்களுக்குமான கட்சி. அனைவருக்கும் இட ஒதுக்கீடு கோரி போராடி வருகிறோம். இனி சாதிக் கட்சி என்று அழைக்க வேண்டாம்.
 1980-இல் சமூக அமைப்பைத் தொடங்கினேன். அதிலும், மக்கள் விகிதாச்சாரப்படி, அனைத்துத் தரப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தினோம்.

 தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18-இல் இருந்து 22 சதவீதமும், வன்னியர்களுக்கு 20 சதவீதம் என்றும் கோரிக்கை வைத்தோம். போராட்டத்தில் 21 பேர் உயிரிழந்தனர். அதன் பயனாக 109 சாதிகள் இடஒதுக்கீட்டை பெற்றன.

 2006-இல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, உயர் கல்வியில் இதர பிற்பட்டோ ருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீடுக்காக, நான் மட்டும் போராடி வென்றேன். கருணாநிதி உள்ளிட்ட எந்தத் தலைவர்களும் அப்போது உதவி செய்யவில்லை.  எனவே, சாதிக் கட்சி என்ற பொய் குற்றச்சாட்டுகள் எடுபடாது. சமூக நீதி, சமத்துவத்துக்காக பாடுபடும் கட்சியாக பாமக உள்ளது.

 நாட்டிலேயே நிழல் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த கட்சியாக பாமக உள்ளது. முதல்வருக்கான தகுதியுள்ளவர் அன்புமணி. நாங்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் 100 தொகுதிகளில் வெற்றி நிச்சயம். இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கும். விருப்பமுள்ளவர்கள் கூட்டணிக்கு வரலாம்’’ என்றார் அவர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: