Friday, January 22, 2016

நாம் விரும்பும் சென்னை".. தலைநகரில் நகர்வலம் வந்த அன்புமணி

சென்னை: நாம் விரும்பும் சென்னை என்ற பெயரில் சென்னை நகர மக்களைச் சந்திக்கும் பயணத்தை பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தொடங்கினார்.சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று அவர் சென்று மக்களைச் சந்தித்து சென்னையை மேம்படுத்தத் தேவையானவை குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்தார்.சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு வகையில் மக்களைக் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் பாமகவும் பல்வேறு திட்டங்களை அன்புமணியை முன்வைத்து தீட்டி செயல்படுத்தி வருகிறது.
பிரசாரம் தொடக்கம் இந்த பிரசாரம் இன்று காலை தொடங்கியது. சூளைமேட்டில் தனது பிரசாரத்தை அன்புமணி தொடங்கினார். அவருடன் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் உடன் வந்தனர்

மக்களிடம் கலந்துரையாடல் இந்த சந்திப்பின்போது மக்களிடம் நீங்கள் சென்னையை எந்த விதத்தில் மாற்றியமைக்க விரும்புகிறீர்கள் என்று கருத்து கேட்டார் அன்புமணி.
 
பகுதி பகுதியாக தொடர்ந்து புரசைவாக்கம், தங்கசாலை, ராயபுரம், திருவொற்றியூர் என அன்புமணியின் பிரசாரம் தொடர்ந்தது. அவர் போன இடங்களிலெல்லாம் பெரும் திரளான மக்கள் கூடி அன்புமணியுடன் பேச ஆர்வம் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: