Friday, January 9, 2015

ராஜபக்சே தோத்துட்டாரு.. லட்டு எடு கொண்டாடு.. தொண்டர்களுடன் கொண்டாடிய அன்புமணி!

சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பா.ம.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.சைதாப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு ஏ.கே.மூர்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் கன்னியப்பன், வி.ஜே. பாண்டியன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொண்டனர்
இதேபோல் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக இளைஞர் தலைவருமான அன்புமணி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.ராஜபக்சே தோல்வியை பல்வேறு கட்சியினர் பட்டாசு வெடித்து தமிழகத்தில் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். விழுப்புரம், உளுந்தூர்ப்பேட்டையில் ஏராளமானோர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் திருக்கோவிலூரிலும் தேமுதிக, திமுக, விசி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: