Friday, January 30, 2015

தமிழக அரசின் ஊழல்கள்: விசாரணை ஆணையம் கோரி ஆளுனரிடம் பிப்.4ல் மனு: பா.ம.க. அறிவிப்பு

 

தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல்கள் அதிகரித்து விட்டன. அதுமட்டுமின்றி, கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை தொடர்பான விசாரணைகளில்  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இவை தவிர மற்ற ஊழல்கள் குறித்த தகவல்களையும் திரட்டியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வரும் 04.02.2015 புதன்கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை  உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய பா.ம.க. குழு சென்னை கிண்டியிலுள்ள ஆளுனர் மாளிகையில் ஆளுனர் ரோசய்யாவை சந்தித்து அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் பற்றி விசாரணை ஆணையம் அமைக்கக் கோரும் மனுவை அளிக்க உள்ளது. இவ்வாறு பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: