Monday, January 26, 2015

ஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது இந்தியாவுக்கு இழுக்கு : ராமதாஸ்

 

இந்திய குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரீனாவில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  கவர்னர் ரோசைய்யா கொடி ஏற்றினார்.   முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீர,தீர செயல் புரிந்தோருக்கு அண்ணா விருது வழங்கினார்.

இவ்விழாவில் கலைநிகழ்ச்சிகளூம், கண்கவர் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெற்றன.  இந்த ஊர்திகளில் தற்போதைய முதல்வர் படம் இருக்க வேண்டிய இடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இருந்தது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில்,  ‘’ குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது அவமான கரமானது; இந்தியாவுக்கு இழுக்கு’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: