Saturday, January 24, 2015

பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா? பிப்.15-ல் முடிவு: டாக்டர் ராமதாஸ்

சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பது குறித்து அடுத்த மாதம் 15-ந் தேதி நடைபெறும் தமது கட்சியின் செயற்குழுவில் முடிவெடுக்கப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.சென்னையில் இன்று கோகுல மக்கள் கட்சி சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரி உண்ணாவிரதப் போராட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் டாக்டர் ராமதாசிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:கே: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள்?ப: நான் ஏற்கனவே சொன்ன பதிலைதான் இப்போதும் சொல்கிறேன். யாருக்கும் ஆதரவு இல்லை. தேர்தலில் போட்டியிடவும் இல்லை.கே: அப்படியானால் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா?ப:- சேலத்தில் பிப்ரவரி 15-ந் தேதி நடைபெறும் பா.ம.க. செயற்குழுவில் இது பற்றி முடிவு செய்கிறேன்.கே: 2016-ல் நீங்கள் யாருடன் கூட்டணி அமைப்பீர்கள்?ப:- தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத மாற்று கூட்டணி, புதிய கூட்டணி அமைப்போம்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: