Sunday, December 8, 2013

ஏற்காட்டில் ஜனநாயகம்தோல்வி: ராமதாஸ்

சென்னை: ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பணத்தையும், பரிசுப்பொருளையும் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலில் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகம் தோல்வியடைந்திருக்கிறது. நோட்டா முறையை அதிகம் பேர் பயன்படுத்தியுள்ளது, திராவிட கட்சிகளுக்கு எதிரான மக்களின் மனநிலையே காட்டுகிறது. தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல்கள் மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதில்லை. தற்போதைய ஆளுங்கட்சிக்கு எதிரான கோபத்தை வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் காட்டுவார்கள். அப்போது மக்களின் ஆதரவு யாருக்கு என தெரியவரும் என கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: