Monday, December 23, 2013

பிடிக்காதவர்களை பழிவாங்கும் நோக்குடனும் நடந்து கொள்ளும் போக்கு



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கிறித்துமஸ் வாழ்த்து செய்தியில், ’’எதிரிகளையும் மன்னிக்க வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திரு நாளாக கொண்டாடும் கிறித்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த கிறித்துமஸ் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று இயேசுபிரான் விரும்பி னார். ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் அன்பு காட்டினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்கு களையும் நேசித்தார்.

உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீது நீ அன்பு காட்டுவாயாக! என்று கூறி அன்பின் மகத்துவத்தை மற்றவர்களுக்கும் புரிய வைத்தவர். ஆனால், இயேசு போதித்த கொள்கைகளை எல்லாம் மறந்துவிட்டு சுயநலத்துடனும், பிடிக்காதவர்களை பழிவாங்கும் நோக்குடனும் நடந்து கொள்ளும் போக்கு  அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
‘‘தந்தையே இவர்களை மன்னியும்... ஏனெனில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை’’ என்றார் இயேசுபிரான். அவரது இந்த போதனையை மனதில் கொண்டு, மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, நாட்டில் அமைதி நிலவவும், போட்டி பொறாமைகள் அகலவும், ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் துயரங்கள் அகலவும் உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை கிறித்துமஸ் வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: