Thursday, December 5, 2013

மக்கள் பாடம் புகட்டுவர்: ராமதாஸ் சபதம்

திண்டிவனம்: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி, விடுதலையான வன்னியர் சங்க தலைவர் குரு, பா.ம.க., நிறுவனர், ராமதாசை சந்தித்து பேசினார். அப்போது ராமதாஸ் அளித்த பேட்டி: தமிழக அரசு சட்டத்தின் கீழ் ஆட்சி நடத்தாமல், போலீஸ் ஆட்சியை நடத்துகிறது. வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உட்பட பா.ம.க.,வினர், 134 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இப்போது, அது தவறு என, ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹிட்லர் போல் ஆட்சி புரியும் ஜெயலலிதா, என்ன ஆனார் என, நாம் வரலாற்றில் பார்ப்போம். இதற்கெல்லாம், வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவர், என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: