Monday, December 30, 2013

தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பதை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: ராமதாஸ் பேச்சு



தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பதை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் பாமக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்:
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக நீதிமன்றம் மூலம் பாமக போராடியது. அதேபோல, சமச்சீர் கல்விக்காகவும் போராட்டங்களை நடத்தினோம். இதற்காக, பாடுபட்ட பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த தேர்தலின் போது ஒளிமயமான எதிர்காலம் உள்ளதாக அதிமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது தமிழகம் இருளில் முழ்கியுள்ளது.
எனது வாக்கு விற்பனைக்கு இல்லை என்ற வாசகங்கள் உங்கள் வீட்டுக்கு முன் வைக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் வாக்களிக்க பணம் தருவர். வாக்களிக்க பணம் கொடுப்பதை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: