Saturday, October 5, 2013

ரயில் கட்டண உயர்வை திரும்ப பெறுக: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மக்களை பாதிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பயணிகள் மற்றும் சரக்குக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:"டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி பயணிகள் ரயில் கட்டணம் நாளை மறுநாள் முதல் 2 சதவீதம் உயர்த்தப்படும் என்று ரயில்வேத்துறை அறிவித்திருக்கிறது. இது தவிர சரக்குக் கட்டணமும் வரும் 10 ஆம் தேதி முதல் 1.7 சதவீதம் உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.பார்சல் கட்டணம், பொருட்கள் சரக்குக் கட்டணம் ஆகியவை கடந்த ஒன்றாம் தேதி 15 சதவீதம் உயர்த்தப்பட்டன. அதற்குள்ளாக பயணிகள் கட்டணமும், சரக்குக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ரயில்வேத்துறைக்கு ஆண்டுக்கு ரூ.4700 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். இது டீசல் விலை உயர்வால் ரயில்வேத்துறைக்கு ஏற்படும் கூடுதல் செலவைவிட அதிகமாகும்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: