Tuesday, October 22, 2013

அடுத்த வாரத்துக்குள் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: அன்புமணி ராமதாஸ்



பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை டாக்டர் ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்டார்.
அதன்படி கிருஷ்ணகிரி தொகுதியில் ஜி.கே.மணி, ஆரணி தொகுதியில் ஏ.கே. மூர்த்தி, சேலம் தொகுதியில் இரா.அருள், அரக்கோணம் தொகுதியில் அரங்க.வேலு ஆகியோர் போட்டியிடுகிறார்கள். புதுச்சேரியில் அனந்தராமன் போட்டியிடுகிறார்.
இந்த 5 தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடந்தது. இதற்கு அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து கருத்து கேட்டார். தேர்தல் பிரசார வியூகம், தொண்டர்களின் தேர்தல் பணி, கூட்டணி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள 5 பாராளுமன்ற தொகுதி பா.ம.க. நிர்வாகிகளுடன் கலந்து பேசினேன். ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடத்தப்படும்.
அதற்கான தேதி இன்று மாலைக்குள் முடிவு செய்யப்படும். அடுத்த வாரத்துக்குள் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: