Tuesday, October 22, 2013

அனைத்து சமுதாய கூட்டணியில் இதுவரை 9 அமைப்புகள் சேர்ந்துள்ளன: ஏ.கே.மூர்த்தி



பாமக தலைமையிலான அனைத்து சமுதாய கூட்டணியில் இந்திய மக்கள் கட்சி இணைந்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் யாதவ மகா சபை தலைவரும், இந்திய மக்கள் கட்சியின் தலைவருமான தேவநாதனை பாமக நாடாளுமன்ற வேட்பாளர்கள் அரங்க வேலு, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் சந்தித்தனர்.
இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.மூர்த்தி, அனைத்து சமுதாய கூட்டணி, திராவிட கட்சிகளின் மாற்று கூட்டணியாக அமையும். அனைத்து சமுதாய கூட்டணியில் இதுவரை 9 அமைப்புகள் சேர்ந்துள்ளன என்றார்.
இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும் என்று தேவநாதன் தெரிவித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: