Thursday, October 10, 2013

ஜெ. குருவை தவிர 132 பாமகவினரும் விடுதலை



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைதைத் தொடர்ந்து, மாநிலத்தில் பல பகுதிகளில், வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து பா.ம.க.,வினர் பலர் கைது செய்யப்பட்டனர்.    இவர்களில், 132 பேர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. பா.ம.க.,- எம்.எல்.ஏ., குரு மீது, தே.பா., சட்டம் பாய்ந்தது.
 குண்டர் சட்டம், தே.பா., சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்து உத்தரவு பெற்றனர். குண்டர் தடுப்பு மற்றும் தே.பா., சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டதை, உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த, 14 பேர், தே.பா., சட்டத்தின் கீழ், கைது செய்ததை, ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் ராஜேஸ்வரன், ஆறுமுகசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
தே.பா., சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டதை, 'டிவிஷன் பெஞ்ச்' ரத்து செய்தது. தற்போது, குரு மீதான வழக்கு மட்டும், நிலுவையில் உள்ளது. இம்மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.
இதுகுறித்து, பா.ம.க., வழக்கறிஞர், கே.பாலு கூறும்போது, 'குண்டர் தடுப்பு மற்றும் தே.பா., சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட, 132 பேர், விடுவிக்கப்பட்டுள்ளனர். தே.பா., சட்டத்தின் கீழ், குரு கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனு, 11ம் தேதி (இன்று) விசாரணைக்கு வருகிறது," என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: