Thursday, October 10, 2013

பா.ம.க.வை இளைஞர்களிடம் ஒப்படைத்து விட்டோம்: ராமதாஸ் பேச்சு



 



தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஆரணி, அரக்கோணம் ஆகிய 5 தொகுதிகளை சேர்ந்த பா.ம.க. இளைஞரணி மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் 10.10.2013 வியாழக்கிழமை காலை நடந்தது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,
பாராளுமன்ற தேர்தலில் முழுக்க முழுக்க இளைஞர் சக்தியை நம்பி பா.ம.க. போட்டியிடுகிறது. தனித்து போட்டியிடப் போகிறோம் என்று முடிவெடுத்த உடனேயே கட்சியை இளைஞர்களிடம் ஒப்படைத்து விட்டோம். இளைஞர்களின் ஆற்றலும், அறிவும் சேரும்போது வெற்றி நிச்சயம். திராவிட கட்சிகளை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பது காலம் நமக்கு இட்டுள்ள கட்டளை. அதை நிறைவேற்றியே தீருவோம். அதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளரை இப்போதே இந்தக் கூட்டத்தில் நான் அறிவித்துவிடுவேன். இருப்பினும் ஓரிரு நாட்கள் ஆகட்டும். பாராளுமன்ற தேர்தலில் முதல் முதலாக வேட்பாளரை அறிவிக்கும் கட்சி பாமகதான். வேட்பாளர்களுக்கு துணையாக இளைஞர்கள் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், இளம்பெண்கள் சங்கம் ஆகிய அணிகளில் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களை தேர்வு செய்து அவர்கள் மூலம் களப்பணி ஆற்ற வேண்டும். நமது கட்சியை சேர்ந்த காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. உள்பட 123 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் காடுவெட்டி குருவை தவிர 122 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்காக டாக்டர் அன்புமணி, வக்கீல் பாலு ஆகியோர் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்து முயற்சிகள் எடுத்தனர். அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். இவ்வாறு பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: