Wednesday, October 30, 2013

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை: அன்னதானம் வழங்கி மரியாதை செலுத்திய பாமகவினர்



ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும் பொன்னில் ஆண்டுதோறும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா, அக்டோபர் 28 முதல் 30–ந்தேதி வரை 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை திங்கட்கிழமை தொடங்கியது.
விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இந்த ஆண்டு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் சில அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு செல்ல முடியவில்லை.
இந்தநிலையில் திண்டிவனத்தில் பாமக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏழுமலை தலைமையில் சுமார் 100 பேர் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். மேலும், 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.
தமிழகம் முழுவதும் உள்ள முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர்கள், தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையில் கலந்து கொள்ள செல்வார்கள். ஆனால் வடமாவட்டங்களில் இதுபோன்று இதுவரை செய்ததில்லை. இந்த வருடம் முதல் முறையாக இதுபோன்று பாமகவினர் செய்துள்ளனர். இதுகுறித்து பாமகவினர் கூறியதாவது, அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பாக தேவருக்கு மரியாதை செலுத்தியும், அன்னதானமும் வழங்கியுள்ளோம் என்றனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: