Friday, August 2, 2013

இடஒதுக்கீட்டை பாதுகாக்க கூட்டு இயக்கம்! சரத்யாதவுடன் அன்புமணி சந்திப்பு!



 


பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு டெல்லியில் 02.08.2013 வெள்ளிக்கிழமை ஐக்கிய ஜனதாயதளத் தலைவர் சரத் யாதவை சந்தித்து பேசினார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கழகத்தில் மருத்துவ பேராசிரியர்களுக்கான வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பதால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்தும், இதனால் மற்ற பல்கலைக் கழகங்களின் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் ஆபத்து இருப்பது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
அப்போது இட ஒதுக்கீட்டை பாதுகாக்க கூட்டு இயக்கம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சரத் யாதவுக்கு மருத்துவர் இராமதாசு எழுதிய கடிதத்தையும் சரத் யாதவிடம் அன்புமணி ஒப்ப்டைத்தார்.
தொடர்ந்து ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரையும் அன்புமணி இராமதாஸ் சந்தித்து பேச உள்ளார் என பாமக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: