Wednesday, August 7, 2013

ராமதாஸ் இரமலான் வாழ்த்து



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முப்பது நாட்கள் பகலில் உண்ணாமலும், பருகாமலும் நோன்பிருந்து ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல் உபதேசமான குர்&ஆனில் அருளப்பட்ட போதனைகள் அனைத்தையும் இந்நாளில் நினைவு கூர்ந்து அவற்றை கடைபிடிக்க உறுதியேற்க வேண்டும் என்றும், இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் இஸ்லாம் போதிக்கிறது. அதன்படியே இஸ்லாமியர்கள் தங்களால் இயன்ற கொடைகளை வழங்குகிறார்கள். ஆனாலும் பெரும்பாலான இஸ்லாமியர்களின் வாழ்க்கை நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை அவர்களுக்கு போதிய அளவில் கிடைக்காததே இதற்கு காரணம் ஆகும். இக்குறையை போக்க இஸ்லாமிய பெருமக்களுக்கு தேசிய அளவில் போதுமான அளவுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட வேண்டும்.
இறைதூதர் நபிகள் நாயகம் ஆற்றிய இறுதி உரையில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகள் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மனித நேயத்திலும், நீதி நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை ஆகும். அவற்றை கடைபிடித்து, உலகில் அமைதி, வளம், நல்லிணக்கம் ஆகியவற்றை பெருக்கவும், தீமைகளை
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: