சேலம்: ""அ.தி.மு.க., அரசு மீது, மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது,'' என்று
அன்புமணி கூறினார்.சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பா.ம.க., நிர்வாகிகளை
சந்தித்து விட்டு, சேலம் மாவட்ட, பா.ம.க.,பொதுக்குழுவில் அன்புமணி கலந்து
கொண்டார்.
அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:சேலம் மத்திய சிறையில்
அடைக்கப்பட்டுள்ள, 21 பேர் மீது, குண்டர் தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம்
போடப்பட்டுள்ளது. இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று மாதங்களாகி விட்டன.
வன்னியர் சமுதாயத்தை பழி வாங்கும் நோக்கில், அரசு இப்படி செய்துள்ளது.தமிழகம்
முழுவதும், 123 பேர் தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களில், 30 பேர் நீதிமன்றம் மூலம்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.லோக்சபா தேர்தல் அ.தி.மு.க.,வுக்கு பலத்த தோல்வியை
அளிக்கும். நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் மக்கள் மத்தியில் அரசு மீது
அதிருப்தி நிலவுகிறது. தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளில், 4,000 கொலை நடந்துள்ளது.
தமிழகத்தில், போலீஸ் ஆட்சியே நடக்கிறது.
போலீஸ் துறையில் இருப்பவர்கள் இறந்தால்,
மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், பிற துறைகளில் அது போன்று
வழங்கப்படுவது இல்லை. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உட்பட அனைவருக்கும், போலீஸ்
பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்பட வில்லை.
மக்கள் சொத்துக்களை சுரண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி கலெக்டர்
மாற்றப்பட்டுள்ளார். இதை, பா.ம.க., வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அன்புமணி
கூறினார்
Thursday, August 8, 2013
அ.தி.மு.க., அரசு மீது மக்கள் அதிருப்தி:பா.ம.க., பாய்ச்சல்
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
No comments:
Post a Comment