Sunday, August 25, 2013

7 மாதங்களில் தமிழகத்தில் 1100 படுகொலைகள் : ராமதாஸ் கண்டனம்



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘’விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் திருமலைவாசன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்த திருமலை வாசனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கி றேன்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியான திருமலைவாசன் அவரது சொந்த பணிக்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போது இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவகத்திலிருந்து 50 மீட்டர் தொலை வில் பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலையை காவல்துறையினரால் தடுக்க முடியவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் ஓரிடத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்கள் கூடக் கூடாது என காவல்துறையினர் எச்சரித்துள்ள நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அருகிலேயே பத்துக்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் கூடி கொடூர மான முறையில் கொலையை நிகழ்த்தி விட்டு எந்த எதிர்ப்பும் இல்லாமல் தப்பிச் சென்றுள்ளனர். கொலையாளிகளை கைது செய்ய காவல்துறையினர் எந்த முயற்சியும் செய்யவில்லை.
இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கூலிப்படையாக செயல்படுபவர்கள். விழுப்புரத்தைச் சேர்ந்த போக்கிலி தலைமையில் சதித் திட்டம் தீட்டப்பட்டு, அதனடிப்படையில் தான் இவர்களை அழைத்து வந்து இப்படுகொலை நடத்தப்பட் டிருக்கிறது.

இதையெல்லாம் காவல்துறை கண்காணித்திருந்தால் திருமலைவாசன் கொலையை தடுத்திருக்க முடியும். ஆனால், செயலிழந்த காவல்துறை அதை செய்வதற்கு தவறி விட்டது.திருமலைவாசனின் படுகொலை யால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே விக்கிரவாண்டியை அடுத்த இராதாபுரத்தில் தி.மு.க. நிர்வாகி ஆசைத்தம்பி என்பவர் கூலிப்படையினரால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இன்று காலையில் கூட தமிழக& புதுவை எல்லையில் உள்ள மதகடிப்பட்டு என்ற இடத்தில் ஒருவரை விழுப்புரத்திலிருந்து சென்ற கூலிப்படையினர் வெட்டிக் கொன்றுள்ளனர்.
கடந்த 15 நாட்களில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டி ருக்கின்றனர். இத்தகைய படுகொலைகளை தடுத்து மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரோ எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் முயற்சியில் ஈட்டுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில் தான் விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையினரால் முடியவில்லை.

இந்த அவல நிலைக்காக காவல்துறைக்கு பொறுப்பேற்றிருப்பவர்கள் வெட்கப்பட வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே இதேநிலை தான் காணப்படுகிறது.
நடப்பு ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 1100-க்கும் அதிகமான படுகொலைகள் நடைபெற்று ள்ளன. மக்கள் நிம்மதியாக வெளியில் சென்று வரமுடியாத நிலைதான் காணப்படுகிறது. காவல்துறை முற்றிலும் செயல் இழந்து விட்டதை தான் இது காட்டுகிறது. எனவே, இனியாவது எதிர்க்கட்சி யினரை பழிவாங்கும் செயல்களில் காவல்துறையினரை ஈடுபடுத்துவதை விட்டுவிட்டு, சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். பா.ம.க. ஒன்றிய செயலாளர் திருமலைவாசன் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்’’என்று கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: