Saturday, April 23, 2011

ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராவது உறுதி! - ராமதாஸ்

சென்னை: கணிப்புகளைப் புறம் தள்ளி திமுக கூட்டணி இந்தத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பிடிப்பது உறுதி. 6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பார், என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.


சென்னையில் திமுக தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் டாக்டர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இச் சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "திமுக தலைமையிலான ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆறாவது வது முறையாக தமிழக முதல்வ ர் பொறுப்பை கருணாநிதி ஏற்று, நல்லாட்சியைத் தொடர்வார். இச்சந்திப்பு மரியாதை நிமித்தமானதுதான்", என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: