Tuesday, April 5, 2011

எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கும்தகுதியற்றவர் ஜெயலலிதா: ராமதாஸ்

சென்னை:சென்னை தீவுத்திடலில் நடந்த, ஐ.மு.கூட்டணி பிரசார கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:ஐக்கிய முற்போக்கு கூட்டணி, முற்போக்கு கூட்டணி; எதிரணி கூட்டணி பிற்போக்கு கூட்டணியாக இருக்கிறது. கடந்த 2001-06 ல் ஜெ., முதல்வராக இருந்த போது, கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவதாகவும், காஸ் சிலிண்டர் வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார்; எதையும் செய்யவில்லை. 2006-11ல் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் சொன்னதைச் செய்தார்.
பொதுவாக மத்தியில் உள்ள அரசுக்கும், மாநில அரசுக்கும் நல்லிணக்கம் தேவை. நரசிம்மராவ் இந்திய பிரதமராக இருந்த போது, தலைமுறை இடைவெளி இருப்பதாக அந்த கூட்டணியில் இருந்து கொண்டே ஜெ., விமர்சித்தார்.பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு செலக்ட்டிவ் அம்னீஷியா இருப்பதாகவும், வாஜ்பாய் செயலற்ற பிரதமர் என்றும் விமர்சித்தார். சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்த நிலையில், ஜெ., மன்னிப்பு கேட்டார். பிரதமர் மன்மோகன் சிங்கை பலகீனமான கால்களை பெற்ற பிரதமர் என்றும் பேசினார். தி.மு.க., ஆட்சி தொடர்ந்து நடந்தால் தமிழகம் வளர்ச்சி அடையும்; அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வீழ்ச்சி அடையும்.தேர்தல் கமிஷன் ஒரு தலைப் பட்சமாக செயல்பட்டு வருகிறது என்பதை நாங்கள் தெரிவித்து வருகிறோம். மதுரை கலெக்டர் சகாயத்தின் அத்துமீறல்கள் ஏராளம். டில்லி தேர்தல் கமிஷனுக்கும், இங்கிருக்கும் சிலருக்கும், "ஹாட் லைன் ' இணைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கும் தகுதியற்றவர். கடந்த ஐந்து ஆண்டுகளாக 18 பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்துள்ளனர். அதில், ஒரு பங்கைக் கூட அ.தி.மு.க., வினர் செய்யவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தமிழகம் இருண்டு விட்டதாக பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. வாக்காளர்கள் புத்திசாலிகள்; ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்வார்கள்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: