Wednesday, April 13, 2011

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குடும்பத்துடன் ஓட்டு பதிவு

திண்டிவனம் : திண்டிவனத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தினருடன் வந்து ஓட்டு போட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில், நேற்று காலை 10.10 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வந்தார். அவரது மனைவி சரஸ்வதி, மகன் அன்புமணி, மருமகள் சவுமியா, மகள் ஸ்ரீகாந்தி, மருமகன் பரசுராமன், மற்றொரு மகள் கவிதா ஆகியோரும் வந்தனர்.


இவர்கள் அனைவரும் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளித்தனர். பின் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், "எங்கள் கூட்டணி மகத்தான கூட்டணி. கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வராக பதவி ஏற்பது உறுதி. இதற்கு மக்களும் தயாராக உள்ளனர்' என்றார்.


முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி கூறுகையில், "தி.மு.க.,வின் சாதனைகள் தொடர மக்கள் விரும்புகின்றனர். எங்கள் கூட்டணி வெற்றிப் பெறும். ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வர் ஆவார்' என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: