Friday, January 7, 2011

பொங்கலுக்கு பிறகு தான் கூட்டணி குறித்து தெரிய வரும்-ராமதாஸ்

விழுப்புரம்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டசபை தொகுதியில் பாமக கிளை நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

இளைஞர்களையும், இளம் பெண்களையும் தான் பாமக அதிகமாக நம்பியிருக்கிறது. அதனால் தான் தமிழகம் முழுவதும் அவர்களுக்கு பயிற்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மயிலம் சட்டசபை தொகுதியில் பாமகவுக்கு 269 கிளைகள் உள்ளன. இதில் 60 கிளைகள் தலித் சமுதாய மக்களின் கிளைகளாகும்.

நமது நாட்டில் 500க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. இதில் வன்னியர்கள் மட்டும் தமிழகத்தில் 2.5 கோடி பேர் உள்ளனர். ஆனால் இந்நாள் வரை ஒரு வன்னியர் கூட முதல்வராக முடியவில்லை.

வரும் சட்டப்பேரவை தேர்தலின்போது பிற கட்சியினர் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று கொடுத்தால் வாங்கிக் கொண்டு மாம்பழ சின்னத்தில் ஓட்டு போடுங்கள்.

வரும் தேர்தலில் பாமக துணையின்றி எந்த கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. பொங்கலுக்குப் பிறகு தான் கூட்டணி குறித்து தெரிய வரும். பாமக கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: