Friday, January 21, 2011

7 புதிய நீதிபதிகள் நியமன சிபாரிசு பட்டியல்: வன்னியர்கள் இடம்பெறாததற்கு ராமதாஸ் அதிருப்தி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 7 நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர். அதற்கான சிபாரிசு பட்டியலில் வன்னியர்கள் யாரும் இடம் பெறாதது வருத்தம் தருகிறது. அனைத்து சமூகத்தினருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிப்பதில் தொடர்ந்து வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை வெறும் 4 வன்னியர் குல வழக்குரைஞர்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 51 நீதிபதிகள் இருக்கின்றனர். இதில் ஒரே ஒருவர் தான் வன்னியர்.

தற்போதுள்ள 7 நீதிபதிகள் காலியிடங்களுக்கு நீதிபதிகள் நியமனக்குழு 7 பேரை பரிந்துரை செய்துள்ளதாகத் செய்திகள் வந்துள்ளன. இந்த சிபாரிசில் ஒரு வன்னியர் கூட இல்லை என்பது தான் வன்னியர் குல வழக்குரைஞர்களை கொந்தளிப்படையச் செய்துள்ளது.

தொடர்ந்து குறிப்பிட்ட சில சமூகத்தினர் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். அதிலும் நியமனக் குழுவில் இருப்பவர்கள் சமூகத்தினர் தான் தொடர்ந்து நீதிபதிகாளாகின்றனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது.

நீதிபதிகளை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இந்த நியமனம் வெளிப்படையாகவும், தகுதி, திறமை அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கி்ன்றனர். சில விதிமுறைகளை மீறி தற்போது சிபாரிசு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சமூக நீதிக்கு எதிரான செயலாகும்.

தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகத்தினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் எந்தவித போராட்டத்தையும் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்று சம்பந்தப்பட்ட பொறுப்புடையவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தற்போது அனுப்பப்பட்டுள்ள இந்த சிபாரிசு பட்டியலை உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பி அனைத்து சமூகத்தினருக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து புதிய பட்டியலைத் தயாரித்து கொடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இதன் மூலம் அனைத்து சமூக வழக்குரைஞர்களுக்கும் உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: