Sunday, October 25, 2015

தேமுதிக வந்தால் ஏற்போம்: ராமதாஸ் பேட்டி

 

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

பாமக சார்பில் மாதிரி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மக்களிடம் விளக்கும் வகையில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

அப்போது மீனவர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிவார். பின்னர் அதன் அறிக்கையை கட்சி தலைமைக்கு தாக்கல் செய்வார். அதையடுத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எங்கள் கட்சி சார்பில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளோம். இதை ஏற்று தேமுதிக எங்களோடு கூட்டணிக்கு வந்தால் அதை ஏற்றுக் கொள்வோம்.

ரூ.1500 கோடிக்கு சீன பட்டாசுகளை இறக்குமதி செய்துள்ளனர். பொம்மைகள் என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதை கண்டுபிடித்து பறிமுதல் செய்ய வேண்டும். காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் தங்களிடம் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறுகிறார்கள். எனவே, இடர்பாடு காலங்களில் தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அதுபோல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: