Sunday, October 25, 2015

முதலமைச்சராக பதவி வகிக்க தகுதியற்றவர் ஜெயலலிதா

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

முதலமைச்சராக பதவி வகிக்க தகுதியற்றவர் ஜெயலலிதா. ஆங்கிலேய வைஸ்ராய் கோடை வாசஸ்தலம் செல்வதுபோல கோடநாடு சென்றுள்ளார். 2011ல் பதவியேற்றதில் இருந்து கோடநாட்டில் 145 நாட்கள் ஓய்வு எடுத்துள்ளார். அரசு அதிகாரிகளை கோடநாட்டுக்கு அழைத்து நிர்வாகம் செய்கிறார். 

பொதுவியோகத் திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்படும் பாதிப் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. இறக்குமதி செய்யப்படும் பருப்பை குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்க ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் டன் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அவற்றில் பாதியை அரசே கள்ளச்சந்தைக்கு அனுப்புகிறது. பதுக்கல்காரர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் மிக நெருங்கிய கூட்டணி உள்ளது. 

வாரத்திற்கு 40 நிமிடங்கள் கூட முதலமைச்சர் ஜெயலலிதா பணியாற்றுவதில்லை. மக்கள் பிரச்சனைகள் பற்றி கவலைப்படாத அவர் கோடநாட்டில் ஓய்வு எடுக்கிறார். கர்நாடகாவில் இருந்து உரிய நீரை பெற்றால் மட்டுமே காவிரி டெல்டா பகுதியில் கருகும் பயிர்களை காக்க முடியும் என்றார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: